ADDED : ஜூன் 17, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி,; இளையான்குடி அருகே உள்ள நாகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் மகன் முருகேசன்.
இவர் பொருட்களை எமனேஸ்வரத்தில் வாங்கிவிட்டு நாகநாதபுரத்தில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.