/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் உண்டியல் திறப்பு
/
சிங்கம்புணரியில் உண்டியல் திறப்பு
ADDED : நவ 20, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் ஏப். 15ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதற்குப் பிறகு நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.
2 தற்காலிக, 3 நிரந்தர உண்டியல்களை திறந்த அதிகாரிகள் அவற்றில் இருந்த காணிக்கை பணத்தை எண்ணினர்.
இதில் 10 லட்சத்து 11,076 ரூபாயும், 9 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் சிவகங்கை தேவஸ்தான சிரஸ்தார் வி.கே.சுப்பிரமணியன், ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சுகன்யா, கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் பக்தர்கள், மாணவர்கள் ஈடுபட்டனர்.