sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ் ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிக்க உத்தரவு 

/

போலீஸ் ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிக்க உத்தரவு 

போலீஸ் ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிக்க உத்தரவு 

போலீஸ் ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிக்க உத்தரவு 


ADDED : ஆக 22, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள 258 சி.சி.டி.வி., கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்து அறிக்கை வழங்க தாசில்தார்களுக்கு, கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட அளவில் 43 போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், மனுதாரர்களை வரவேற்க வரவேற்பாளர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனர். மனுதாரர்களிடம், ஸ்டேஷனில் அத்துமீறி நடக்க கூடாது என்ற நோக்கில், ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் தலா 6 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் போலீஸ் ஸ்டேஷன்களில் மக்களை மரியாதையுடன் நடத்துகிறார்களா என்பதை கண்காணிக்கவும், தொடர்ந்து சி.சி.டி.வி., கேமராக்கள் பராமரிக்கப்பட்டு, அவற்றின் பதிவுகளை சேகரித்து வைத்துள்ளார்களா என பரிசோதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாவட்ட அளவில் 43 போலீஸ் ஸ்டேஷன்களில் பொருத்தப்பட்டுள்ள 258 சி.சி.டி.வி., கேமராக்களின் செயல்பாடு நன்றாக உள்ளதா என்பது குறித்து நேரடி கள விசாரணை செய்து அறிக்கை வழங்க வேண்டும் என அந்தந்த பகுதி தாசில்தார், நகராட்சி கமிஷனர், பேரூராட்சிகள் செயல் அலுவலர்களுக்கு கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us