ADDED : செப் 23, 2025 04:11 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின கருத் தரங்கு நடந்தது.
மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம், மாவட்ட இணை செயலாளர் கலைச்செல்வம், கார்த்திகை மதி, சகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார தலைவர் ராஜேஷ்குமார் வர வேற்றார். மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
அமைப்போம் திரள்வோம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார். சங்கமும் நமது கடமையும் என்ற தலைப்பில் மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் பேசினார்.
மாவட்டபொருளாளர் பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் மாரி, துணை தலைவர் பாண்டி, சின்னப்பன், மகளிரணி லதா, பொருளாளர் கலைச்செல்வி உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். துணை தலைவர் தனபால் நன்றி கூறினார்.