sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

/

ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

1


ADDED : அக் 02, 2025 04:06 AM

Google News

ADDED : அக் 02, 2025 04:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பெயரளவிற்கு செயல்படுவதால் நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர். 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடந்தது.

இந்நிலையில் சூரக்குடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது. சூடாமணிபுரம் சுப்பிரமணியபுரம், கணேசபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி காளவாய் பொட்டல் மக்கள் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து முறையாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றம் செய்யப்படவில்லை. பழைய மருத்துவ மனை கட்டடங்கள் பயனின்றி பாழாகி கிடப்பதோடு, ஒரு மருத்துவருடன் புறநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா கூறுகையில்: அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்வதை கண்டித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. புதிய மருத்துவமனைக்குச் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. ஆட்டோவில் செல்ல ரூ.300 வரை செலவாகும். எனவே பழைய மருத்துவமனையை நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வருகிறது. சுகாதாரத் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us