ADDED : மே 14, 2025 05:00 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே ந.வயிரவன்பட்டியில் உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மே 18 ல் நடைபெறும் ஓவியப்போட்டியில் பங்கேற்க பள்ளி,கல்லூரி மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகமும், பொன்னமராவதி ஸ்கெட்சர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றனர். இந்திய அருங்காட்சியகங்கள், செட்டிநாடு பாரம்பரிய கட்டடங்கள், தமிழக சுற்றுலா தலம் இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் ஓவியம் வரையலாம். போட்டிகள் 6வயது முதல் 12 வயதுவரை மற்றும் 12 வயது முதல் 18 வயது வரை ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறும். ந.வைரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் மே 18 காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும்.
முன் பதிவிற்கு 85240 94345ல் தொடர்பு கொள்ளலாம்.தேர்வானவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரால் சான்றிதழ் வழங்கப்படும்.