sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாதயாத்திரையாக திரும்பிய பழநி காவடிகள்

/

பாதயாத்திரையாக திரும்பிய பழநி காவடிகள்

பாதயாத்திரையாக திரும்பிய பழநி காவடிகள்

பாதயாத்திரையாக திரும்பிய பழநி காவடிகள்


ADDED : பிப் 21, 2025 06:38 AM

Google News

ADDED : பிப் 21, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குப்பை:' சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து பழநிக்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்ற நகரத்தார் காவடிகள் பாதயாத்திரையாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

தேக்காட்டூர் முனைச்சந்தை குப்பாபிச்சன் செட்டி குமரப்பன் கி.பி.1601 ல் காவடி கட்டி குன்றக்குடி வழியாக தைப்பூசத்திற்கு பழநிக்கு பாத யாத்திரையை துவக்கினார். தற்போது நெற் குப்பையிலிருந்து அவரது சந்ததியினர் 14வது தலைமுறையாக காவடி எடுத்து சென்றனர். பாரம்பரிய பாதையில் சென்று பிப்.13 ல் பழநியாண்டவருக்கு காவடி செலுத்தினர். மூலவருக்கு பிப்.15ல் பஞ்சாமிர்தம் அபிஷேகம், பிப்.16ல் சந்தன அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். பிப்.17ல் மீண்டும் காவடிகளுடன் பாதயாத்திரையாக திரும்பினர்.

நேற்று முன்தினம் சமுத்திராப்பட்டி வந்த காவடிகளுக்கு நெற்குப்பை பூசாரி அய்யா,சந்தன அய்யா மற்றும் கண்டனுார் சாமியாடி அய்யா மற்றும் காரைக்குடி அரண்மனை பொங்கல் அய்யா ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுக்கு விபூதி, சந்தனம் வழங்கினர்.

தொடர்ந்து யாத்திரை புறப்பட்ட காவடிகள் இரு வேறு வழிகளில் மேலைச்சிவபுரி, குன்றக்குடிக்கு வந்து சேர்ந்தனர்.






      Dinamalar
      Follow us