ADDED : நவ 22, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் அத்தி மரத்திலான அத்தி வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேவகோட்டை நித்திய கல்யாணி புரத்தில் உள்ள சவு பாக்ய வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.