sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்

/

9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்

9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்

9ம் வகுப்பில் சேர்க்க மறுப்பு; தவிக்கும் பெற்றோர்


ADDED : ஜூன் 12, 2025 10:51 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்; மாவட்டம் முழுவதும் எட்டாம் வகுப்பில் கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர்களை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதால் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு ஆர்வமாக சென்றுள்ளனர்.

கிராமங்களில் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர் ஒன்பதாம் வகுப்பில் சேர நகர்ப்புறங்களை நாடி வருகின்றனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் சேர வரும் மாணவ, மாணவியர்களில் சிலருக்கு தமிழ்,ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியாததால் பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

தலைமையாசிரியர்கள் கூறுகையில்: எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில் 10 சதவிகித தோல்வியை மட்டுமே மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏற்று கொள்வார்கள், ஐம்பது சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்றால் தலைமையாசிரியர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும், ஒன்பதாம் வகுப்பில் சேர வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே எழுத படிக்க தெரியவில்லை.

இவர்களை வைத்து நாங்கள் எப்படி பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சி காட்டுவது என கேள்வி எழுப்புகின்றனர்.






      Dinamalar
      Follow us