ADDED : மார் 14, 2024 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ளது எழுவங்கோட்டை. தென்னிலை நாட்டைச் சேர்ந்த 96 கிராமங்களுக்கு தலைமை ஊர். தலைமை கோயிலான விஸ்வநாதர் கோயில் உள்ளது.
கல்லல், சருகணி செல்ல குறுக்குச் சாலை என்பதால் போக்குவரத்து எப்போதும் இருக்கும். இந்நிலையில் கல்லலில் மெயின்ரோட்டில் இருந்து போரிவயல் வரை புதிதாக ரோடு போடப்பட்டு மைல்கல் வைக்கப்பட்டுஉள்ளன. இதில் எழுத்துப்பிழை உள்ளன.
குறிப்பாக எழுவங்கோட்டையிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வைத்துள்ள மைல் கல்லில் 'எழுவங்கோட்டை 'என்பதற்கு பதில் ' எழுன்கோட்டை ' என்று எழுதியுள்ளனர். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

