/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல கோடி செலவழித்தும் பலனில்லை தவிப்பு சிவகங்கைபஸ் ஸ்டாண்டில் பயணிகள்
/
பல கோடி செலவழித்தும் பலனில்லை தவிப்பு சிவகங்கைபஸ் ஸ்டாண்டில் பயணிகள்
பல கோடி செலவழித்தும் பலனில்லை தவிப்பு சிவகங்கைபஸ் ஸ்டாண்டில் பயணிகள்
பல கோடி செலவழித்தும் பலனில்லை தவிப்பு சிவகங்கைபஸ் ஸ்டாண்டில் பயணிகள்
UPDATED : டிச 14, 2025 06:22 AM
ADDED : டிச 14, 2025 06:20 AM

சிவகங்கை, சிவகங்கை பஸ் ஸ்டாண்டை பல கோடி ரூபாய் செலவழித்து
விரிவாக்கம் செய்தும் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதியும்
இல்லாத நிலை தொடர்கிறது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்ட் மூன்று பிரிவாக இயங்கி வருகிறது.
காளையார்கோவில், தொண்டி, மானாமதுரை, மேலுார் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஒரு இடத்திலும், திருப்புத்துார், திருச்சி செல்லும் பஸ்கள் ஒரு இடத்திலும் மதுரை, கோவை செல்லும் பஸ்கள் ஒரு இடத்திலும் இயக்கப்படுகிறது. இங்கு எந்த பஸ்கள் எங்கு நிற்கும் என்பதற்கு அறிவிப்பு பலகை எதுவும் கிடையாது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் இதனால் குழப்பத்தில் உள்ளனர்.
2015ஆம் ஆண்டு பாலுாட்டும் தாய்மார்களுக்காக தனிஅறை இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி முடிந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த பாலுாட்டும் அறையை அகற்றி அங்கு கடை அமைத்து விட்டனர்.
அதேபோல் பயணிகள் நிற்கும் பிளாட்பாரம் பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நிற்க இடமில்லை. கடைகள் முன்பு பயணிகள் நின்றால் கடையை மறைப்பதாக கூறி பயணிகளை கடை வைத்திருப்பவர்கள் தள்ளி நிற்குமாறு கூறுகின்றனர்.
பயணிகளுக்கான இடத்தில் கடையை வைத்து விட்டு பயணிகளை விரட்டுவது குறித்து நகராட்சி அதிகாரிகள் கவலைப்படுவதில்லை.
வருவாயை குறிக்கோளாக கொண்டு நகராட்சி அதிகாரிகள் செயல்படுகின்றனர். இங்கு பயணிகள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 18 கடைகளும் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் இன்னும் திறக்கப்படவில்லை.
பயணிகள் குடிப்பதற்கு குடி தண்ணீர் இல்லை. போதிய சி.சி.டி.வி., கேமராக்களும் பொருத்தவில்லை. பயணிகள் நிற்கும் இடங்களை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்தி பார்க்கிங் பகுதியாகவும் மாற்றியுள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கோவில் முன்பு முழுமையாக கான்கிரீட் தளம் பதிக்கப்படாமல் வாகனங்கள் செல்லும் போது எழும் துாசியால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

