/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பென்ஷனர்கள் உயிர்வாழ்வு சான்று தபால்காரர் மூலம் பெறலாம்; நவ.1 முதல் சிறப்பு முகாம்
/
பென்ஷனர்கள் உயிர்வாழ்வு சான்று தபால்காரர் மூலம் பெறலாம்; நவ.1 முதல் சிறப்பு முகாம்
பென்ஷனர்கள் உயிர்வாழ்வு சான்று தபால்காரர் மூலம் பெறலாம்; நவ.1 முதல் சிறப்பு முகாம்
பென்ஷனர்கள் உயிர்வாழ்வு சான்று தபால்காரர் மூலம் பெறலாம்; நவ.1 முதல் சிறப்பு முகாம்
ADDED : அக் 26, 2024 06:56 AM
சிவகங்கை : தமிழகத்தில் பென்ஷனர்கள் தபால்காரர்கள் கையிலேயே டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று பெறும் திட்டத்தை தபால்துறை துவக்கியுள்ளது.
மத்திய, மாநில அரசு, வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலம் பென்ஷன், ராணுவ பென்ஷன் பெறுவோர் மற்றும் பிற பென்ஷனர்கள் நவ.1 முதல் தங்களின் உயிர்வாழ்வு சான்றினை கருவூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே தபால் துறை மூலம் டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று பெறலாம்.
பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்.டி., ஆப் முறையில் டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று வழங்கப்படும்.
பென்ஷனர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம், தபால்காரர்களை தொடர்பு கொண்டு சான்றினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx இணையதளம் அல்லது “Post Info” செயலி பதிவிறக்கம் செய்து, உயிர்வாழ்வு சான்றுக்காக கோரிக்கையை பதிவு செய்யலாம். இதற்காக அனைத்து தபால் நிலையங்களிலும் நவ., 1 முதல் டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
ரூ.70 கட்டணம்
சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் கூறியதாவது: தபால் காரரிடம் ஆதார் எண், அலைபேசி எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று சமர்ப்பிக்கப்படும்.
பென்ஷனர்கள் வீட்டில் இருந்த படியே அந்தந்த பகுதி தபால்காரர்கள் மூலம் சான்றினை பெறலாம். இதற்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.