ADDED : ஜூலை 30, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அனைவருக்கும் அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரவியம் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணிராஜ், நீலமேகம், வெங்கடசுப்பாராம், கண்ணுச்சாமி, சங்கரசுப்பிரமணியன், பாலுச்சாமி கோரிக்கை யை விளக்கி பேசினர்.

