sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பூவந்தி கண்மாயில் சீறிப்பாயும் தண்ணீர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்த மக்கள்

/

பூவந்தி கண்மாயில் சீறிப்பாயும் தண்ணீர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்த மக்கள்

பூவந்தி கண்மாயில் சீறிப்பாயும் தண்ணீர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்த மக்கள்

பூவந்தி கண்மாயில் சீறிப்பாயும் தண்ணீர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்த மக்கள்


ADDED : அக் 18, 2024 05:19 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூவந்தி: பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் நீரில் ஆபத்தை உணராமல் பலரும் மீன் பிடித்து வருகின்றனர்.

650 ஏக்கர் பரப்பளவுள்ள பூவந்தி கண்மாயை நம்பி இரண்டாயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றின் இடது பிரதான கால்வாய் மூலம் பூவந்தி கண்மாய்க்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் வைகை ஆற்றில் மழை தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மழைத்தண்ணீர் வந்ததால் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வெளியேறுகிறது.

பூவந்தி கண்மாய் நிரம்பி மடப்புரம், ஏனாதி, தேளி என அடுத்தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும், பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் நிலையில் சீறிப்பாயும் தண்ணீரை எதிர்த்து நீந்தும் மீன்களை சுற்றுவட்டார கிராம மக்கள் ஆபத்தை உணராமல் இடுப்பளவு தண்ணீரில் நின்று பிடித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கண்மாய்க்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது. வெளியேறும் தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது. விபரீதம் ஏற்படும் முன் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் மக்களை கட்டுப்படுத்த வேண்டும்






      Dinamalar
      Follow us