sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலி

/

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலி

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலி

கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலி


ADDED : நவ 24, 2024 08:53 AM

Google News

ADDED : நவ 24, 2024 08:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வி.வடமலைபாளையம் கருடாமுத்துார் பகுதியில் அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக தீர்த்தம் எடுக்க ராமேஸ்வரம் வந்தனர். கார்த்திகேயன் காரில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு சண்முகசுந்தரம், 45, நாகராஜ், 36, கார்த்திகேயன், 33, தீபக் அரவிந்த், 26, வந்தனர்.

நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் தீர்த்தம் சேகரித்துக்கொண்டு காரில் புறப்பட்டனர். காரை தீபக் அரவிந்த் ஓட்டினார்.

ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பகுதியில் மதியம் 12:30 மணிக்கு கார் வந்தபோது சாலையோர பாலத்தில் மோதியது.

இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்தில் பலியானார். தீபக் அரவிந்த், நாகராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லும் வழியில் பலியாயினர்.

கார்த்திகேயன் காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us