sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் சித்திரை திருவிழா ராட்டினங்களுக்கு அனுமதி மறுப்பு

/

மானாமதுரையில் சித்திரை திருவிழா ராட்டினங்களுக்கு அனுமதி மறுப்பு

மானாமதுரையில் சித்திரை திருவிழா ராட்டினங்களுக்கு அனுமதி மறுப்பு

மானாமதுரையில் சித்திரை திருவிழா ராட்டினங்களுக்கு அனுமதி மறுப்பு


ADDED : ஏப் 27, 2025 07:24 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரையில் இந்தாண்டு சித்திரை திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றினுள் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினம் உள்ளிட்டவை அமைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

மானாமதுரையில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் .விழாவிற்கு மானாமதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தார்கள் மண்டகப்படியில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளுவர்.

அந்தந்த கிராமத்தார்கள் மண்டகப்படி நடைபெறும் போது கிராமமே வைகை ஆற்றுக்கு வந்து விடும், இரவு முழுவதும் கிராமத்தார்கள் சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெறும்.சிறுவர்,சிறுமியர்களை கவர வைகை ஆற்றினுள் ஒவ்வொரு வருடமும் டோரா டோரா, ஜெயண்ட் வீல், சர்க்கஸ், பொம்மை ரயில், ராட்சத பலூன், சிறுவர் போட், கார், பைக் சாகசம் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படும்.

இதற்காக நகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறையினர் அனுமதி வழங்க வேண்டும்.

இந்தாண்டு வைகை ஆற்றினுள் ராட்டினங்கள் அமைக்க போலீசார் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மறுத்து விட்டனர்.






      Dinamalar
      Follow us