/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ்கள் இன்றி பயணிகள் பரிதவிப்பு நீண்ட நேரம் காத்திருந்த பரிதாபம்
/
பஸ்கள் இன்றி பயணிகள் பரிதவிப்பு நீண்ட நேரம் காத்திருந்த பரிதாபம்
பஸ்கள் இன்றி பயணிகள் பரிதவிப்பு நீண்ட நேரம் காத்திருந்த பரிதாபம்
பஸ்கள் இன்றி பயணிகள் பரிதவிப்பு நீண்ட நேரம் காத்திருந்த பரிதாபம்
ADDED : ஜன 14, 2024 06:26 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளாகினர்.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகின்றன.
தொலை துார பேருந்துகளை நம்பியே திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பலரும் வெளியூர் சென்று வருகின்றனர்.
திருப்புவனத்தில் வசிக்கும் பலரும் மதுரை, மேலுார், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொலை துார பேருந்துகள் பலவற்றையும் போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளாக மாற்றி சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பலரும் பாதிப்பிற்குள்ளாகினர். திருப்புவனத்தில் நேற்று காலை பரமக்குடி செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகளே இல்லை.
காலை நேரத்தில் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே வந்து சென்றதால் பலரும் காத்து கிடந்தனர்.
குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டதால் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. முதியோர்கள், பெண்கள் பேருந்துகளில் அளவிற்கு அதிகமாக இருந்த கூட்டத்தை பார்த்து பயந்து பேருந்துகளில் ஏற முடியாமல் பரிதவித்தனர்.

