/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
10க்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு சரிதான்: கார்த்தி எம்.பி., கருத்து
/
10க்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு சரிதான்: கார்த்தி எம்.பி., கருத்து
10க்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு சரிதான்: கார்த்தி எம்.பி., கருத்து
10க்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு சரிதான்: கார்த்தி எம்.பி., கருத்து
ADDED : ஆக 10, 2025 01:33 AM
காரைக்குடி:காரைக்குடியில் சிவகங்கை காங்., எம்.பி.,கார்த்தி கூறியதாவது:
அடிக்கடி பொதுத் தேர்வு வைத்தால் மன அழுத்தம் ஏற்படும். பத்தாம் வகுப்புக்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு போதுமானது.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடுநிலை கேள்விக்குறியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டும் போது பா.ஜ.,வினர் எதற்கு வக்காலத்து வாங்குகின்றனர் என தெரியவில்லை. வட மாநிலத்தில் இருந்து வேலைக்கு வருவோர், வேலை முடிந்ததும், இடம் விட்டு இடம் செல்பவர்கள் . அவர்களை எப்படி தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். டிரம்ப் வரி விதிப்பதால் இந்தியாவிற்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பாதிப்பு தான். இப்பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.
உண்மையை மறைப்பதற்கு தான் என்கவுன்டர் வழி வகுக்கும்.
எப்போது தேர்தல் வந்தாலும் சிவகங்கை மாவட்ட காங்., கட்சி தயார் நிலையில் உள்ளது. பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இடையே நடப்பது குடும்பப் பிரச்னை. இதுவரை பழனிசாமி தலைமையிலான கூட்டணி சந்தித்த 3 தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அது, அனைத்து பகுதிகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.