/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் இடியும் போலீஸ் குடியிருப்பு வீடுகள்
/
சிவகங்கையில் இடியும் போலீஸ் குடியிருப்பு வீடுகள்
சிவகங்கையில் இடியும் போலீஸ் குடியிருப்பு வீடுகள்
சிவகங்கையில் இடியும் போலீஸ் குடியிருப்பு வீடுகள்
ADDED : டிச 26, 2025 05:28 AM
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் கூரைகளில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 12 வீடுகள் உள்ளது. இதில் தற்போது 90 ஆயுதபடை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றனர். சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்துள்ள கட்டடத்தில் குடியிருக்க போலீசார் அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்துள்ள குடியிருப்புகளை அப்புரப்படுத்திவிட்டு புதிய வீடுகளை கட்டித் தரவேண்டும் என போலீசார் கோரிக்கை வைக் கின்றனர்.

