sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

'மனித உயிர்களை மதிக்காத போலீஸ்': மார்க்சிஸ்ட் சண்முகம் தாக்கு

/

'மனித உயிர்களை மதிக்காத போலீஸ்': மார்க்சிஸ்ட் சண்முகம் தாக்கு

'மனித உயிர்களை மதிக்காத போலீஸ்': மார்க்சிஸ்ட் சண்முகம் தாக்கு

'மனித உயிர்களை மதிக்காத போலீஸ்': மார்க்சிஸ்ட் சண்முகம் தாக்கு


ADDED : ஜூலை 04, 2025 07:25 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்,; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் போலீசார் தாக்கியதில் இறந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து நேற்று மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆறுதல் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் காவல்துறையினர் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில் 24 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளன.

அதில் தலைமைச் செயலகத்திலிருந்து யாரோ ஒருவர் அழுத்தத்தில் தான் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது என எல்லோரும் பேசுகின்றனர். யார் அந்த அதிகாரி என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் தனிப்படை கலைக்கப்படுவதாக டி.ஜி.பி., அறிவித்துள்ளார்.

இதன் மூலம் இதுவரை எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் தனிப்படை என்ற ரவுடிக்கும்பலை வைத்து செயல்பட்டுள்ளது தெரிகிறது.

மனித உரிமைகளும், மனித உயிர்களும் எல்லாவற்றையும் விட மேலானது. அதனை காவு வாங்குதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்பு தான் வழக்கு வேகம் எடுத்துள்ளது. அதன்பின்னரே தமிழக முதல்வர் சி.பி.ஐ., க்கு மாற்றியுள்ளார்.

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us