sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயம்; ஆக. 2 ல் தபால் சேவை இருக்காது: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

/

தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயம்; ஆக. 2 ல் தபால் சேவை இருக்காது: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயம்; ஆக. 2 ல் தபால் சேவை இருக்காது: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயம்; ஆக. 2 ல் தபால் சேவை இருக்காது: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  


ADDED : ஜூலை 29, 2025 10:53 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; தபால் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்காக ஆக.,2 ல் தபால் நிலையங்கள் செயல்படாது என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தபால் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், 2.0 டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது. இனி வரும் காலங்களில் தபால் சேவைகளை விரைந்து டிஜிட்டல் மயமாக்கி வழங்குவதற்காக, கம்ப்யூட்டரில் புதிய சாப்ட்வேர் பதிவேற்றம் செய்தல், புதிய சர்வரை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களும் ஆக., 2 ல் செயல்படாது.

அன்றைய தினம் வாடிக்கையாளர்களுக்கு தபால் நிலையங்களில் சேவைகள் இருக்காது.

ஆனால், தபால் நிலையத்தில் கம்ப்யூட்டரில் சர்வர் பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெறும். அதற்கு பின் புதிய தொழில்நுட்பத்துடன் ஆக., 4 முதல் சிவகங்கை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் செயல்படும், என்றார்.






      Dinamalar
      Follow us