ADDED : நவ 29, 2024 05:50 AM
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடந்த கார்த்திகை பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரைஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற கார்த்திகை பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. வெள்ளி உற்ஸவர் சோமநாதர் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில்எழுந்தருளினார்.
* இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர்கோயிலில், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலில் பிரதோஷ விழாவில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.
* சிங்கம்புணரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்குஅபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.