ADDED : செப் 05, 2025 11:48 PM

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
வெள்ளி உற்ஸவர் சோமநாதர் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தை 3 முறை வலம் வந்தனர்.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் பிரதோஷ விழாவில் பலரும் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் வழிபாடு நடந் தது.