ADDED : பிப் 03, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அமராவதிப்புதூர் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., படித்த ஜெயஸ்ரீ, ஸ்ரீவித்யா, சசிகலா மற்றும் மகரஜோதி ஆகிய மாணவிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நடந்த 12வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஜன. 30 அன்று நடந்த விழாவில் பி.எட்.,ல் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு, தங்கப்பதக்கம் மற்றும் ரொக்க பரிசுகள் பட்டங்களை கவர்னர் ரவி வழங்கினார். மாணவிகளுக்கு ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.
அழகப்பா பல்கலை முன்னாள் துணை வேந்தர் எஸ். சுப்பையா மாணவிகளை பாராட்டினார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். பாலசுந்தரி நன்றி கூறினார்.

