sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

' களஞ்சியம்' செயலியில் விடுப்பு எடுப்பதில் குளறுபடி; தொடக்க கல்வி ஆசிரியர்கள் தவிப்பு

/

' களஞ்சியம்' செயலியில் விடுப்பு எடுப்பதில் குளறுபடி; தொடக்க கல்வி ஆசிரியர்கள் தவிப்பு

' களஞ்சியம்' செயலியில் விடுப்பு எடுப்பதில் குளறுபடி; தொடக்க கல்வி ஆசிரியர்கள் தவிப்பு

' களஞ்சியம்' செயலியில் விடுப்பு எடுப்பதில் குளறுபடி; தொடக்க கல்வி ஆசிரியர்கள் தவிப்பு


ADDED : ஜன 11, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 11, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : விடுமுறையை 'களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க முடியாமல் குளறுபடி ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

கல்வித்துறையின் 'எமிஸ்' செயலியில் ஆசிரியர்கள் விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போது தற்செயல் விடுப்பு எடுக்கும் போது அப்பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதிக்கு செல்லும். அதே போன்று மருத்துவ, ஈட்டிய விடுப்பு விண்ணப்பித்தால், அந்தந்த வட்டார கல்வி அலுவலரின் ஒப்புதலுக்கு செல்லும்.

2025 ஜன., 1 முதல் ஆசிரியர்கள் விடுமுறையை 'களஞ்சியம்' செயலி மூலம் அவரவர் அலைபேசி வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இச்செயலியில் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தற்செயல், மருத்துவம், ஈட்டிய விடுப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விடுப்பு அனுமதியை பெற அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் தான் செயலியில் இடம் பெற வேண்டும். ஆனால், களஞ்சியம் செயலியில் குளறுபடி ஏற்படுத்தும் விதத்தில் விடுமுறை கோரி ஆசிரியர்கள், களஞ்சியம் செயலியில் விண்ணப்பித்தால், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் அனுமதிக்காக என செயலியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் விடுமுறைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us