/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனை வளாகத்தில் தனியார் வாகனங்கள்
/
மருத்துவமனை வளாகத்தில் தனியார் வாகனங்கள்
ADDED : மார் 09, 2025 06:52 AM

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 700க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். 75க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். நான்கு வழிச்சாலை விபத்து, சுற்று வட்டார கிராமங்களில் விபத்து, பிரசவம் உள்ளிட்ட அனைத்திற்கும் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகளும் பிரசவத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் இங்கு தான் அழைத்து வரப்படுகின்றனர்.
24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக பேவர்பிளாக் கற்கள், எம்சாண்ட், இரும்பு கம்பி, ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவைகளும் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நிழல் தரும் மரங்கள் உள்ளதால் பலரும் தங்களது வாகனங்களை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி பார்க்கிங்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் நோயாளிகளை அழைத்து வரும் 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. மூன்று டாக்டர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு காரில் வருகின்றனர்.
ஆனால் தினசரி வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட கார்கள், வேன்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் கார், வேன்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பலரும் கார், வேன்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் வெளிநபர்கள் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.