/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒரே நாளில் 41 லட்சம் மரக்கன்று நட திட்டம்
/
ஒரே நாளில் 41 லட்சம் மரக்கன்று நட திட்டம்
ADDED : செப் 07, 2025 01:30 AM
சிவகங்கை,:தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரே நாளில் 41 லட்சம் மரக்கன்று நடுவதற்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மாணவர்களுக்கு பொது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, வீடு அல்லது உள்ளூரில் ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை நட வேண்டும். மரக்கன்றுடன் தாயார் அல்லது பாதுகாவலருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்.
அந்த புகைப்படத்தை Eco clubs for mission life இணையதளத்தில் செப்.10க்குள் பதிவேற்ற வேண்டும். இந்நிகழ்வு ஒரே நாளில் ஒவ்வொரு வட்டத்திலும் அவர்களுக்கு ஏற்ற நாளில் செப்.10க்குள் செயல்படுத்தப்பட வேண்டும். வனத்துறையுடன் இணைந்து தேவையான மரக்கன்றுகளை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழில் மின் சான்றிதழ் வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு, கோயம்புத்துார், கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, சிவகங்கை, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் மரக்கன்றுகளும், மதுரை, துாத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளும், அரியலுார், சென்னை தலா 75 ஆயிரம் மரக்கன்றுகள் என 38 மாவட்டத்திற்கு 41 லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.