/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய மறியல்
/
பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய மறியல்
பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய மறியல்
பா.ஜ.,நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய மறியல்
ADDED : அக் 30, 2025 03:59 AM

காரைக்குடி: காரைக்குடியில் இன்ஜினியரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி 2 வது நாளாக மறியல் நடந்தது.
அரியக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பழனியப்பன் 34. சிவில் இன்ஜினியர். பா.ஜ., மாவட்ட இளைஞரணி நிர்வாகியான இவர், பொன்நகர் அருகே புதிதாக கட்டி வரும் கட்டடத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பார்வையிட்டார். அங்கு வந்த 3 பேர் ஆயுதங்களால் பழனியப்பனை வெட்டியதில் உயிரிழந்தார். அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடற்கூராய்வுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி., ஆஷிஸ் புனியா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் நேற்று திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உறவினர்கள், பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, விஸ்வகர்மா சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து இறந்தவரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. போலீசார், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

