sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்

/

 சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்

 சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்

 சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்


ADDED : டிச 18, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: விவசாய நிலங்களுக்கு தட்கல் திட்டத்தில் புதிய மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலம் விவசாயிகள் திட்ட தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு 50 ஆயிரம் விவசாய நிலங்களுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. முதல் தவணையாக 17 ஆயிரம் மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்தனர். அடுத்த கட்டமாக 2026 ம் ஆண்டு மார்ச் 31 க்குள் 33 ஆயிரம் விவசாய நிலங்களுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக 250 விவசாய நிலங்களுக்கு தட்கல் முறையில் மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து, இது வரை 208 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளனர். இன்னும் 42 விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கும்பணி நிலுவையில் இருந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கு 385 விவசாய நிலங்களுக்கு தட்கலில் மின்இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகள் திட்ட தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us