ADDED : ஜூன் 10, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த பொது குறைதீர் கூட்டத்தில்,315 மனுக்களை கலெக்டர் ஆஷா அஜித் பெற்றார்.
கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(நிலம்) கீர்த்தனா மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருநாவுக்கரசு பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.