sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கணேசபுரம் சந்தையில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி

/

கணேசபுரம் சந்தையில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி

கணேசபுரம் சந்தையில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி

கணேசபுரம் சந்தையில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி


ADDED : டிச 10, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் வாரச்சந்தையில் கழிப்பிட வசதி இல்லாததால் வியாபாரிகளும் பெண்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்துஉள்ளது. இங்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

400-க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடை, மீன்கடை வியாபாரிகள் உள்ள நிலையில் 90 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவதில் சிக்கல் நிலவியது. இதனால், தற்போது வரை புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் வியாபாரிகள், பெண்கள் பயன்படுத்துவதற்கு சந்தையில் கழிப்பிடம் இல்லை. பழைய கழிப்பிட கட்டடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சந்தை புதிய கட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.






      Dinamalar
      Follow us