sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தலைமையின்றி தத்தளிக்கும் புதுப்பட்டி அரசு பள்ளி

/

தலைமையின்றி தத்தளிக்கும் புதுப்பட்டி அரசு பள்ளி

தலைமையின்றி தத்தளிக்கும் புதுப்பட்டி அரசு பள்ளி

தலைமையின்றி தத்தளிக்கும் புதுப்பட்டி அரசு பள்ளி


ADDED : நவ 04, 2024 07:09 AM

Google News

ADDED : நவ 04, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் ; திருப்புத்தூர் புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்புகள் துவங்கி 5 மாதங்களாகியும் தலைமையாசிரியர் நியமனமின்றி, பள்ளி நிர்வாகம் தத்தளித்து வருகிறது.

இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், திறன் தேர்வுகளில் சாதித்து வருகின்றனர். இதனால் நகரில் முதன்மையான அரசு உயர்நிலைப்பள்ளியாக உள்ளது. தற்போது 700க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படிக்கின்றனர்.

வகுப்புக்கு தலா நான்கு பிரிவுகள் உள்ளன. இப்பள்ளியை சிறப்பாக நிர்வகித்த தலைமையாசிரியர் கடந்த கல்வியாண்டில் ஓய்வு பெற்றார். அதன்பின் நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் இப்பள்ளி தலைமை ஆசிரியராக வர யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், இப்பள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியரே பணியில் உள்ளார்.

பாடங்கள் எடுப்பதுடன் கூடுதல் பணி என்பதால் முன்பு போல் நிர்வாகப்பணிகள் நடைபெறவில்லை. சிறப்பான பள்ளியின் தொடர்வளர்ச்சிக்கு உதவும் வகையில் தலைமை ஆசிரியரின்றி நிர்வாகம் தத்தளித்து வருகிறது.






      Dinamalar
      Follow us