/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புஷ்பவனேஷ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி தொடக்கம்
/
புஷ்பவனேஷ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி தொடக்கம்
ADDED : ஜூலை 07, 2025 03:12 AM
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு இன்று திங்கள் கிழமை பாலாலயத்துடன் பணிகள் தொடங்க உள்ளன.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம், காசிக்கு செல்ல முடியாதவர்கள் பலரும் திருப்புவனம் வந்து முன்னோர்களின் அஸ்தியை கரைத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வார்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இக்கோயிலில் கடந்த 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது.
12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பபிஷேகம் நடத்தப்பட வேண்டும், 23 வருடங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்து வந்த நிலையில் கும்பாபிஷேக பணிகளை தொடர்வதற்காக இன்று (திங்கள் கிழமை) காலை பாலாலயம் நடைபெற உள்ளது.
இதற்கான யாக சாலை பூஜைநேற்று மாலை தொடங்கியது. இன்று காலை ஆறு மணிக்கு விமான ராஜ கோபுர பாலஸ்தாபனம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.