sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில் நிலைய பிளாட்பார குழியால் பயணிகள் பரிதவிப்பு

/

ரயில் நிலைய பிளாட்பார குழியால் பயணிகள் பரிதவிப்பு

ரயில் நிலைய பிளாட்பார குழியால் பயணிகள் பரிதவிப்பு

ரயில் நிலைய பிளாட்பார குழியால் பயணிகள் பரிதவிப்பு


ADDED : ஜன 09, 2024 12:21 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி ரயில் நிலைய பிளாட்பாரத்தில்கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி நீண்ட நாட்களாக மூடப்படாததால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில் நின்று செல்கிறது.

திருப்பாச்சேத்தியைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுரை, ராமேஸ்வரம் செல்ல இந்த ரயிலையே நம்பியுள்ளனர். திருப்பாச்சேத்தியில் மதுரை/ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்லும் என்பதால் தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்வார்கள்.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கேபிள் பதிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குழி தோண்டப்பட்டது. இன்று வரை அந்த குழி மூடப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குழியை முதியோர், பெண்கள் கடக்க முடியாமல் சுற்றி சுற்றி வருகின்றனர். பலமுறை கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவேண்டும்என வலியுறுத்தியும் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us