sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் மழையால் நெல் நாற்றுக்கள் சேதம்

/

திருப்புவனத்தில் மழையால் நெல் நாற்றுக்கள் சேதம்

திருப்புவனத்தில் மழையால் நெல் நாற்றுக்கள் சேதம்

திருப்புவனத்தில் மழையால் நெல் நாற்றுக்கள் சேதம்


ADDED : நவ 07, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 07, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக நெல் நாற்றுக்கள் சேதமடைந்தன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை ஆறரை மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்புவனம் பழையூர் ராகவேந்திராநகர், உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. திருப்புவனம் கண்மாய் மேட்டு மடையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய் துார் வாரப்படாததால் பழையூரில் நேதாஜிதெரு, ராகவேந்திரா நகரைச் சூழ்ந்தது. வீடுகளைச் சுற்றிலும் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் 150 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேற முடியவில்லை. பேரூராட்சி ஊழியர்கள் அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பலத்த காற்று காரணமாக மடப்புரம், திருப்புவனத்தில் பல இடங்களில் மரக்கிளைகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. மடப்புரத்தில் பொள்ளாச்சி பக்தரின் கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. மழை காரணமாக திருப்புவனம் பழையூரில் நெல் நடவு செய்த வயல்களில் தண்ணீர் நிரம்பியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.






      Dinamalar
      Follow us