sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் கொட்டிய மழை

/

காரைக்குடியில் கொட்டிய மழை

காரைக்குடியில் கொட்டிய மழை

காரைக்குடியில் கொட்டிய மழை


ADDED : அக் 12, 2024 04:41 AM

Google News

ADDED : அக் 12, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர், பெருக்கெடுத்து ஓடியது.

காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் அதிக அளவில் இருந்தது. மாலையில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று மாலை தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சாலையோரம் ஒதுங்கினர். செக்காலை, கல்லூரி சாலை, ரயில்வே ரோடு உட்பட பல இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆயுத பூஜையான, நேற்று ஏராளமான வியாபாரிகள் சாலையோரம் கடைகள் அமைத்திருந்தனர். மழையால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

வீடுகளை சூழ்ந்த மழை நீர்


காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாப்பா ஊருணி அருகேயுள்ள காட்டுநாயக்கன் 12வது வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழி இன்றி வீடுகளை சூழ்ந்து வருகிறது.

இங்குள்ள வீரையன் கண்மாயை சுற்றிலும், ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேறி காட்டுநாயக்கன் குடியிருப்புக்கு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலங்களில் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சேகர் கூறுகையில்:

பல ஆண்டுகளாக இப்பிரச்னை நிலவி வருகிறது. 34 மற்றும் 35 ஆவது வார்டுகளுக்கு மத்தியில் உள்ளதால் இப்பிரச்னையை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. இவரிடம் கேட்டால் அவரிடம் கேள், அவரிடம் கேட்டால் இவரிடம் கேள் என்று சொல்கின்றனர். குழந்தைகள் வயதானவர்கள் சிரமம் அடைவதோடு நோய் அபாயமும் நிலவுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில்: தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் தேங்கி விடுகிறது. தேங்கிய மழை நீர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிரந்தரமாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us