நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் நேற்று மாலை 4:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. மானாமதுரை, சிவகங்கை ரோட்டில் உருளி விலக்கு ரோடு அருகே தனியார் பள்ளிக்கு எதிரே உள்ள மின் கம்பத்தில்இருந்து செல்லும் மின் கம்பி ரோட்டில் அறுந்து விழுந்தது.
அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தில்பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்தவுடன் போக்குவரத்து சீரானது.