ADDED : அக் 11, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் அக்.,19 ல் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, அலைபேசி எண் பதிவு, மாற்றம் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்கலாம், என்றார்.