ADDED : மே 09, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை (மே 10) ரேஷன் குறைதீர் முகாம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
இதில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்யலாம். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.