ADDED : டிச 13, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை (டிச., 14) ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை குறைதீர் கூட்டம் நடக்கும்.
இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் பெறுதல், அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு மனு செய்து, நிவர்த்தி பெற்று செல்லலாம், மேலும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம், என்றார்.