sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : மே 09, 2025 03:04 AM

Google News

ADDED : மே 09, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:பூவந்தி அருகே, மினி சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பூவந்தி அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில், 38 மூட்டைகளில் 40 கிலோ வீதம் மொத்தம் 1,520 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வாகனத்துடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த டிரைவர் முத்துமுருகனை 38, கைது செய்தனர். அப்பகுதி மக்களிடம், ரேஷன் அரிசியை வாங்கி, பூவந்தியில் உள்ள கோழிப்பண்னைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதில் தொடர்புடைய, சரக்கு வாகன உரிமையாளர் வெற்றிவேலை போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us