/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
ADDED : ஜூலை 05, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருமயம் லேனாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
கல்லூரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தலைமை வகித்தார். முதல்வர் பாலமுருகன் 'கருத்துப்பரிமாற்றத்திறனும் உறவு மேம்பாடும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் மற்றும் குழு ஆய்வு நடத்தி விளக்கினார். 'வளர்ச்சிக்கான மனநிலை' என்ற தலைப்பில் முதன்மையர் (ஐசிடி) ராபின்சன் ஒருங்கிணைத்தார்.
பின்னர் 'அணியாதலின் வலிமை' பற்றியும் 'மாணவர்களை எதிர்கொள்ள தயாராதல்' பற்றியும் துறைத்தலைவர் (இசிஇ) சீனிவாசன் பயிற்சி அளித்தார்.