sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை -- கல்லல்- காரைக்குடி டவுன் பஸ் தொடர்ந்து இயக்க கோரிக்கை 

/

சிவகங்கை -- கல்லல்- காரைக்குடி டவுன் பஸ் தொடர்ந்து இயக்க கோரிக்கை 

சிவகங்கை -- கல்லல்- காரைக்குடி டவுன் பஸ் தொடர்ந்து இயக்க கோரிக்கை 

சிவகங்கை -- கல்லல்- காரைக்குடி டவுன் பஸ் தொடர்ந்து இயக்க கோரிக்கை 


ADDED : அக் 09, 2024 06:00 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை - - கல்லல் - காரைக்குடி அரசு டவுன் பஸ் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஓடுவதால் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் தவிப்பிற்கு உள்ளாகின்றனர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் அரசு டவுன் பஸ் நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பனங்குடி, பாகனேரி, சொக்கநாதபுரம், கல்லல் வழியாக தினமும் காரைக்குடிக்கு சென்று வர வேண்டும்.

இந்த பஸ் மூலம் நாட்டரசன்கோட்டை முதல் கல்லல் வரையிலான கிராமப்புற மாணவர்கள், கல்லல், காரைக்குடியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு சென்று வர ஏதுவாக அமைந்திருந்தது.

அதே போன்று காரைக்குடி, கல்லல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் தினமும் இயங்கி வந்த சிவகங்கை - கல்லல் -- காரைக்குடி அரசு டவுன் பஸ்சை வெள்ளி முதல் திங்கள் வரை மட்டுமே இந்த வழித்தடத்தில் ஓட்டுக்கின்றனர். செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் ஓட்டுவதில்லை.

பஸ் வராத நாட்களில் மாணவ, மாணவிகள், ஊழியர்கள் திருப்புத்துார் சென்று, அங்கிருந்து காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே சிவகங்கை -- கல்லல் - காரைக்குடி வரை சென்று வரும் அரசு டவுன் பஸ்சை தடையின்றி தினமும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us