/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்தால் தினசரி விபத்து பாலம் அமைக்க கோரிக்கை
/
பள்ளத்தால் தினசரி விபத்து பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 04, 2025 11:43 PM

திருப்புவனம்,: திருப்புவனம் புதுார் மாதவன் நகரில் சாலையோர பள்ளத்தில் தினசரி பலரும் விழுந்து காய மடைந்து வரும் நிலையில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாதவன் நகர் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பிரமனுார் தார்ச்சாலையை கடந்து கால்வாயில் விடப்படுகிறது. சாக்கடை கால்வாய் மேலே பிரமனுார் ரோடு செல்கிறது. கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற் படுவதால் அதனை சரி செய்வதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்த பள்ளம் சரி செய்யப் படாததால் நாளுக்கு நாள் பள்ளத்தின் ஆழமும், அகலமும் அதிகரித்து வருகிறது. இப்பாதை வழியாக வில்லிய ரேந்தல், பனையனேந்தல், பிரமனூர், அச்சங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
சாக்கடை கால்வாய் மேற்பகுதியில் பாலம் அல்லது சிமென்ட் குழாய் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை யடுத்து இரு ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டுமான பணிக்காக பள்ளத்தை மேலும் அதிகரித்தவர்கள் அப்படியே விட்டு விட்டனர்.
ஆரம்பத்தில் சிறிய பள்ளமாக இருந்தது தற்போது பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இப் பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலரும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.