/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2025 07:00 AM
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பணியை ஆய்வு செய்த எம்.பி.,கார்த்தி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல் கின்றனர்.
இந்த பஸ் ஸ்டாண்டில் கடந்த ஆட்சியில் காளையார்கோவில், தொண்டி, மானாமதுரை, மேலுார் பஸ்கள் நிற்கும் இடத்தில் ரூ.74 லட்சத்தில் தகரத்தால் கூரை அமைக்கப்பட்டது.
இந்த பகுதியில் மட்டும் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் 18 கடைகள், தரை தளம், கழிப்பிடம் கட்டப்பட்டது.
இந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் இன்னும் கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது திருப்புத்துார், மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் இரண்டாம் கட்டமாக கூரை அமைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி., யுமான சிதம்பரம், சிவகங்கை எம்.பி., கார்த்தி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வீதம் 2 கோடி ஒதுக்கினர்.
கடந்த பிப்.26ம் தேதி இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு மதுரை, திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் பகுதிகளில் கூரை, தோரணவாயில், சி.சி.டி.வி., கேமரா, பஸ்களின் வருகையை அறிய டிஜிட்டல் பலகை அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
இந்த பணிகளை எம்.பி., கார்த்தி ஆய்வு செய்து ஒப்பந்ததார்களிடம் கட்டுமானப்பணி குறித்து கேட்டறிந்து பணியை நவ. மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

