/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நில எடுப்பு பிரிவில் கலைத்த 20 துணை கலெக்டர் பணியை மீண்டும் வழங்க வலியுறுத்தி சிவகங்கையில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர்.
மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். 3 ஆண்டுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப வேண்டும் உட்பட 10 கோரிக்கையை முன்வைத்து ஆர்பாட்டம் செய்தனர். பொருளாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.