ADDED : பிப் 15, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கல்லுாரி ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லுாரி மைதானத்தில் நின்ற முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா 25, கூத்தாண்டம் விக்னேஷ் 24, முத்துப்பட்டி அஜய் 19, காளீஸ்வரன் 23, பவுல் நகர் ரிச்சர்ட் கிறிஸ்டின் 21, அரளிக்கோட்டை விக்னேஸ் வரன் 21 ஆகிய 6 பேரையும் விசாரித்தனர்.
விசாரணையில் 6 பேரும் ஏ.டி.எம்.,இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

