sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 இல்லம் தேடி மருத்துவம் அளிக்க  ரூ.1 கோடி ஆம்புலன்ஸ் வாகனம்

/

 இல்லம் தேடி மருத்துவம் அளிக்க  ரூ.1 கோடி ஆம்புலன்ஸ் வாகனம்

 இல்லம் தேடி மருத்துவம் அளிக்க  ரூ.1 கோடி ஆம்புலன்ஸ் வாகனம்

 இல்லம் தேடி மருத்துவம் அளிக்க  ரூ.1 கோடி ஆம்புலன்ஸ் வாகனம்


ADDED : டிச 30, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: இல்லம் தேடி மருத்துவ திட்டத்திற்காக ரூ.1 கோடி மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் வழங்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை மத்திய அரசு, சிவகங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கியுள்ளது. இதில், ஒரு டாக்டர், நர்சு, மருந்தாளுநர் பணியில் இருப்பர். கிராமங்கள் தோறும் சென்று இலவசமாக மருத்துவம் அளித்து, மாத்திரை வழங்கப் படும்.

மாநில அளவில் இது போன்று 10 ஆம்புலன்ஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. சிவ கங்கைக்கு வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கிவைத்து, வாகன சாவியை இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தரராமனிடம் ஒப்படைத்தார்.

கலெக்டர் பி.ஏ., (பொது) விஜயகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, தாசில்தார் விஜயகுமார், டாக்டர் பானுப்பிரியா, கண்காணிப்பு அலுவலர் அருண்கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரி, மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் முத்துப்பாண்டியன், உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us