/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு ரூ.1.09 கோடி நலத்திட்ட உதவி
/
மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு ரூ.1.09 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு ரூ.1.09 கோடி நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் 120 பேருக்கு ரூ.1.09 கோடி நலத்திட்ட உதவி
ADDED : டிச 04, 2025 05:32 AM

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 120 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகராட்சி தலைவர் துரைஆனந்த் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட 120 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். விழாவில் ஓவிய போட்டியில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 29 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்று வழங்கப்பட்டது. 24 குழுக்களை சேர்ந்த சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு குழுவிற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அமைச்சர் வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

