/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.20 லட்சம் மோசடி; இளைஞர்களுக்கு 'வலை'
/
ரூ.20 லட்சம் மோசடி; இளைஞர்களுக்கு 'வலை'
ADDED : அக் 12, 2025 11:09 PM
காரைக்குடி; இரும்புக்கடை வியாபாரியிடம், 20 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வடமாநில இளைஞர்களை போலீசார் தேடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கீழக்கடியாவயல் வெங்கடாச்சலம், 63; இரும்பு தளவாட பொருள் விற்பனை செய்கிறார். இவரிடம், வடமாநில இளைஞர்கள், கட்டட வேலைக்காக அடிக்கடி இரும்பு கம்பிகளை வாங்கி சென்றனர். அப்போது, தங்களிடம், 2 கிலோ தங்கமாலை இருப்பதாக கூறினர். இதற்கு, 30 லட்சம் ரூபாய் தருமாறு கேட்ட நிலையில், அவர், 20 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார்.
அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் 2 தங்க மணிகளை வழங்கினர். அதை அவர் நகை கடையில் பரிசோதித்தபோது, தங்க மணி தான் என, தெரிந்தது. பின், காரைக்குடிக்கு உறவினர்களுடன் காரில் சென்று, 20 லட்சம் ரூபாயை கொடுத்து அவர்களிடம், 2 கிலோ தங்க மாலையை வாங்கினார். பின், அது போலி என, தெரிந்தது. இதுதொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீசார், வடமாநில இளைஞர்கள் மீது வழக்கு பதிந்து தேடுகின்றனர்.